எஸ்.என்.ஆர் சன்ஸ் கல்லூரி சார்பில் "டெக்னோ கிளான்ஸ் 2017" என்னும் கல்லூரிகளுக்கு இடையேயான போட்டிகள் எஸ்.என்.ஆர் கலையரங்கில் நடைபெற்றது. கணினித் துறைகள் தொடர்புடைய தகவல் தொழில்நுட்பம், கணினி அறிவியல், மற்றும் கணினி பயன்பாடு போன்ற துறை மாணவர்களுக்கு இப்போட்டிகள் நடைபெற்றது.

விழாவினை, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஸ்கை பிரிட்ஜ் இன்போடெக் தலைமை நிர்வாக அதிகாரி சக்தி கோபாலசுவாமி குதுவிளகேற்றி நிகழ்ச்சியினை தொடங்கி வைத்து மாணவர்களுக்கு உரையாற்றினார். பின்னர், போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுப் பொருட்களை வழங்கினார். "டெக்னோ கிளான்ஸ் 2017" போட்டியில் கோயம்புத்தூர் மற்றும் அதனை சுற்றி உள்ள கிட்டத்தட்ட முப்பதுக்கும் மேற்பட்ட கல்லூரிகள் இந்த போட்டியில் பங்கேற்றது.

இதில், எஸ்.என்.ஆர் சன்ஸ் கல்லூரி முதல்வர் கருணாகரன், கல்லூரி துணை முதல்வர் தீனா, துறைத் தலைவர்கள் ஏனாசரோ விஜேந்திரன், சுமதி, மரியா பிரெஸிலா, வேலைவாய்ப்பு இயக்குனர் வெங்கடேசன் மற்றும் பணியாளர் ஆலோசகர் சுமதி ஆகியோர் கலந்து கொண்டனர்.